For Daily Alerts
Just In
கள்ளநோட்டு கும்பல் கூண்டோடு கைது
பெங்களூர்:
தமிழ்நாடு, ஓசூரில் ரூ 1.6 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்களையும், 500 ரூபாய் கள்ளநோட்டுக்களையும் பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 12-ம் தேதி ஓசூரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் போலீஸார் சோதனை செய்த போது ஓசூரைச் சேர்ந்தபாஷா (60), நாகேஷ் (45) ஆகிய இரண்டு பேரும், சிவா (35) என்ற பெங்களூரைச் சேர்ந்த ஒரு வரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 1.6 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் கொடுத்த தகவலின்படி ஓசூரைச் சேர்ந்த நாராயாண ரெட்டி என்பவரின் உதவியுடன் கள்ள நோட்டுக்கள்புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டஅனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, February 18, 2001, 5:30 [IST]