மவுஸ் கள் நிறைந்த நாடு இந்தியா ... பிரமோத் மகாஜன்
கோவை:
இந்தியா இப்போது பாம்பாட்டிகளின் நாடு அல்ல, "மவுஸ் கள் நிறைந்த நாடு என பிரமோத் மகாஜன் சனிக்கிழமைகோவையில் தெரிவித்தார்.
கோவையில் உள்ள அமிர்தா இன்ஸ்டியூட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய தகவல்தொழில்நுட்பம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் பேசியதாவது:
இந்திய அணு சக்தியைப் பெற்றதால் உலக நாடுகளில் வல்லரசு என்ற அந்தஸ்தைத் பெற்றது. முன்பெல்லாம்இந்தியா என்றால், பாம்பாட்டிகள் நிறைந்த நாடு என்று தான் சொல்வார்கள்.
ஆனால் இப்போது எலிப் பொறி (கம்ப்யூட்டர் மவுஸ்) நிறைந்த நாடு என பெயர் பெற்று விட்டது. தெருக்களில்மாடுகள் அலைவது போல, இப்போது டாட் காம்கள் இந்தியத் தெருக்களில் அலைந்து கொண்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் இல்லாத அரசியல்வாதிகளை யாரும் அரசியல் வாதி எனச் சொல்லமாட்டார்கள். இதே போல இனி வரும் காலத்தில் அடுத்த 10 ஆண்டுகளில், இடுப்பு பெட்டில் டேட்டாக்களைகட்டிக் கொள்ளும் நிலை ஏற்படும் என்றார் மகாஜன்.