சடலங்களுடன் ஒரு கை குலுக்கல்!
ஹாங்காங்:
இறந்து போனவர்களின் உடலில் இருந்து விலையுயர்ந்த மோதிரங்கள்,கடிகாரங்களைத் திருடி வந்த ஓங்சி -சம் (37) என்ற நபர் சமீபத்தில் கையும்-களவுமாகபிடிபட்டார்.
இது குறித்த விசாரணை ஹாங்காங்கின் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழநடந்தது அப்போது ஓங் சி-சம்முடன் வேலை செய்பவர் கூறுகையில், இறந்துபோனவர்களுக்கு அஞசலி செலுத்த வருவது போல் சம் வருவார்.
பின்னர் சடலங்களுடன் கை குலுக்குவார். அப்போது அந்த உடல்களில் உள்ள விலைஉயர்ந்த பொருட்களை திருடுவார் என்றார்.
இவரைப் போல பலரும் சடலங்களில் இருந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிவந்துள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் செயற்கை முடி (விக்), சீன நாட்டின் இசைகருவிகள், உடைகள், கை கடிகாரம், நகைகள் போன்றவை அடங்கும்.
இறந்தவர்களின் கைகளை குலுக்குவது இறந்தவர்களிடன் ஆன்மாவை சாந்தி அடையச்செய்யும் என்ற மூட நம்பிக்கை இந்தத் திருடர்களுக்கு வசதியாக அமைந்து விட்டது.