ஹன்ஸி குரோனியேவை விசாரித்த கிங் கமிஷன் கலைப்பு
பி. ராம்ராஜ்
ஜோகானஸ்பர்க்:
முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் கேப்டன் ஹன்ஸி குரோனியே மீதான கிரிக்கெட் ஊழல் குறித்து விசாரித்து வந்த கிங் விசாரணைக் கமிஷன்கலைக்கப்படுவதாக அதன் தலைவர் நீதிபதி எட்வின் கிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீஸார் கண்டறிந்து வெளியிட்ட தகவலையடுத்து பரபரப்பாக பேசப்பட்ட கிரிக்கெட் ஊழலால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஹன்ஸி குரோனியே.
டெல்லி போலீஸாரின் குற்றச்சாட்டை முதலில் மறுத்தாலும் பின்னர் ஒப்புக்கொண்ட குரோனியேவிற்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்கிரிக்கெட் ஆயுட்காலத்தடை விதித்தது.
பின்னர் நியமிக்கப்பட்ட கிங் விசாரணைக்கமிஷன், அனைத்து உண்மைகளையும் தெரிவித்தால் குரோனியேவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது எனதெரிவித்திருந்தது. அது தொடர்பாக குரோனியேவின் வக்கீல்கள் எழுத்துபூர்வமான தகவல்களை கோரியிருந்தார் நீதிபதி எட்வின் கிங்.
விசாரணையின் முடிவில், குரோனியே மட்டுமே கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டதாக முடிவு செய்துள்ள கிங் கமிஷன் குரோனியேவிற்கு அளித்த வாக்குறுதிகுறித்து எதுவும் முடிவு செய்யாமலேயே கலைக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், விசாரணையில் குரோனியே அனைத்து உண்மைகளையும் தெரிவித்து விட்டார் என கிங் கமிஷன்அறிவிக்கும்பட்சத்தில் குரோனியே மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என தெரிவித்தார்.
கிங் கமிஷன் விசாரணையில் உண்மை அனைத்தும் வெளிவரவில்லை என பலர் கருதுகின்றனர். ஆனால், நீதிபதி எட்வின் கிங்கும், தென்னாப்பிரிக்காவின்விளாைட்டுத்துறை அமைச்சரும், குரோனியேவின் கருத்துகளை ஏற்றுக்கொண்டதோடு, மேற்கொண்டு விசாரிக்கும் அளவிற்கு ஆதாரங்கள் இல்லை எனதெரிவித்தனார்.
கிரிக்கெட் ஊழலில் சம்பாதித்த வெளிநாட்டு கரன்ஸிகளை தன் வீட்டில் வைத்திருந்ததாக குரோனியே கூறியுள்ளதால், சரியான வருமானம்காட்டாததற்காகவும், வெளிநாட்டு கரன்ஸியை அனுமதியின்றி வைத்திருந்ததற்காகவும் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கி உள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.