மலேசியா: போதைப் பொருள் பயன்படுத்திய 45 பேர் கைது
கோலாலம்பூர்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் உள்ள குகையிலிருந்து போதைப் பொருட்கள்வாங்கிய 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மலேசியாவில் வெளியாகும் நியு ஸ்ட்ரெயிட் பத்திரிக்கைக்குப் போலீஸார் அளித்த பேட்டி: போதைப்பொருட்களுக்கு அடிமையான 45 பேரைக் காட்டுப் பகுதியில் உள்ள குகையில் கைது செய்துள்ளோம். அவர்கள்அனைவரும் 20 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள்.
இவர்கள் அனைவரும் கோலாலம்பூரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்லேயாங்க் மாவட்டத்தில்உள்ள குகைப் பகுதியில் போதைப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது சுற்றி வளைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.
தினமும் இவர்கள், குகைப் பகுதிக்கு வந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் போதைப்பொருட்களை வாங்கிச் செல்வார்கள். குகையிலிருந்து போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக்மற்றும் அட்டைப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த குகை வாசலில், போதைப் பொருட்கள் வாங்கச் சென்ற தனது கணவனுக்காகக் காரில் காத்திருந்தபெண்ணையும், அவரது குழந்தையையும் கைது செய்துள்ளோம்.
ஸ்லேயாங்க் அருகேயுள்ள குகையில் போதைப் பொருட்கள் அதிக அளவு விற்பனை நடந்து வருகிறது என்றுஅந்தப் பத்திரிக்கயிைல் போலீஸார் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
யு.என்.ஐ.