இந்தியாவில் 26 கோடி பேர் ஏழைகள்
டெல்லி:
இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 26 கோடியாக உள்ளது என தேசியதிட்டக்குழுவின் அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையை மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் கீழே கொண்டுவர 9வது திட்ட காலத்திற்குஇலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலை 26 சதவீதமாகும்.
இது அடுத்த பத்தாண்டுகளில் 12 சதமாக குறைக்கப்படுவதோடு நாட்டின் மொத்த உற்பத்தி திறன் 8 சதவீதமாக இருப்பதற்கான நடவடிக்கைஎடுக்கப்படும் என்று திட்டக்குழு உறுப்பினர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
டெல்லியில் வெளியிடப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (சாம்பிள் சர்வே) அறிக்கை ஒன்றில் கிராமப்புறங்களில் 20 கோடி வறியவர்களும்,நகர்பகுதிகளில் 7 கோடி வறியவர்களும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பஞ்சாப்பில் குறைந்த அளவிலும், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் அதிக அளவிலும் இருக்கின்றனர்.
திட்டகமிஷன் ஏற்பாடு செய்யவுள்ள கருத்தரங்கு ஒன்றில் இந்த அறிக்கை குறித்து பல்வேறு நிபுணர்களும் விவாதிக்க உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்