For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா உதவி கேட்கிறார் சந்திரிகா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் இனப் பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவவேண்டும், சார்க் மாநாடு விரைவில் கூட்டப்பட வேண்டும் என பிரதமர்வாஜ்பாயிடம், இலங்கை அதிபர் சந்திரிகா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் இலங்கை அதிபர்சந்திரிகா. இவர் இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர் வாஜ்பாய்உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

பிரதமர் வாஜ்பாயை சந்தித்து சந்திரிகா பேசியது குறித்து வெளியுறவுத்துறை செய்திதத்தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு மே மாதம்வரை சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளதை சந்திரிகா வரவேற்றுள்ளார்.

இலங்கை இனப் பிரச்சனையை தீர்ப்பதற்காக நார்வே தூதுக்குழு எடுத்து வரும் முயற்சிகுறித்தும் அதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறினார்.

இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க இந்தியா உதவ வேண்டும், விடுதலைப் புலிஅமைப்பை பிரிட்டனில் தடை செய்ய தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும்வாஜ்பாயிடம் விளக்கினார்.

சார்க் மாநாடு விரைவில் கூட்டப்பட வேண்டும். இந்தியா- இலங்கை இடையே நிலவிவரும் நட்புறவு, வர்த்தக ஒப்பந்தம், தடையற்ற வர்த்தகம் ஆகியன குறித்தும் அவர்பேச்சு வார்த்தை நடத்தினார் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X