அமெரிக்க அமைச்சர் வளைகுடா பயணம்: இராக் மீதான தாக்குதல் தீவிரமாகும்?
வாஷிங்டன்:
இராக்கின் மீதான ஆயுத தடைகளை கடுமையாக்கும் விதமாக அமெரிக்காவின்வெளியுறவுத்துறை செயலாளர் கோலின் போவெல் மத்திய கிழக்காசிய நாடுகளுக்குவாஷிங்டனிலிருந்து புறப்பட்டு சென்றார்.
அமெரிக்கா இராக் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு அரபுநாடுகளின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது. இந் நிலையில் கோலின் போவெல் அரபுநாடுகளுக்கு செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.
வாஷிங்டனிலிருந்து புறப்படும் போவெல் முதலில் கெய்ரோ சென்று தங்குகிறார்.அங்கு அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இகோர் இனாவோவை சனிக்கிழமைசந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
ரஷ்யாவால் பெரும் எதிர்ப்புக்குளாகி இருக்கும் அமெரிக்காவின் ஏவுகணை தற்காப்புதிட்டம் குறித்து இவர்கள் இருவரும் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என அமெரிக்கவெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின் ஜெருசலேம், காசா, அமான், குவைத், டமாஸ்கஸ் மற்றும் ரியாத்நாடுகளுக்கு 4 நாள் பயணமாக செல்கிறார். செவ்வாய்க்கிழமை வாஷிங்டன்திரும்பும்முன் புரூசல்சும் செல்கிறார்.
இது குறித்து வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறுகையில், இராக்ஆயுதங்களை குவித்து அருகிலுள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எந்த அளவுக்குஈராக்கின் ஆயுதக் குவிப்பை தடுப்பது,ஆயுதங்களை அழிப்பது என்பன குறித்து அரபுநாடுகளின் கருத்துக்களை போவெல் கேட்டறிவார் என்றார்.
இராக் ஆயுத தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதை தடுப்பதே அமெரிக்காவின்முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.