For Daily Alerts
Just In
ஆந்திரா தலைமைச் செயலகத்தில் குண்டு வெடிப்பு
ஹைதராபாத்:
ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
தலைமைச் செயலகத்தின் ஜி பிளாக் கட்டிடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு யார் காரணம் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி சட்டசபைத் தலைவர் இந்திர சேனா ரெட்டி குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்துசட்டசபையில், காவல்துறை அமைச்சர் தேவேந்தர் கவுடிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை அமைச்சர், குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விரைவில் விசாரணை நடத்தி,அதற்கான பின்னணி குறித்து சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, February 26, 2001, 5:30 [IST]