ஊரு விட்டு ஊரு வந்து....
லண்டன்:
ஊருவிட்டு ஊரு வந்து மனதிற்கு பிடித்த பதார்த்தங்களை உலகின் எந்த மூலையிலிருந்தும் வாங்கி ருசிக்கலாம் என்கின்றனர் லண்டனைச் சேர்ந்த சுற்றுலாபயணிகள்.
லண்டனைச் சேர்ந்த ராசேல் கெர் தனது நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு பிடித்த இந்தியஉணவு வகைகள் கிடைக்கவில்லை. நெட்டில் அலைந்து கொண்டிருந்த போது, நியூ கேஸில் நகரை சேர்ந்த உணவகம் ஒன்றின் வெப்சைட்டை கண்டவர்இ-மெயில் மூலம் இந்திய உணவு வகைக்கு ஆர்டர் செய்துள்ளார்.
ஆர்டரை கண்டு வியப்படைந்த உணவகத்தின் இயக்குநர் ரிக் மக்கார்டல், கெர்ரின் ஆர்டருக்கு உணவு வகைகளை தயாரித்து அனுப்பியுள்ளார். சுங்கத்துறை விதிகளின்படி, இறைச்சியற்ற உணவுப்பதார்த்தங்களை தயாரித்து பின் குளிர்வித்து அனுப்பப்பட்ட அவற்றை மீண்டும் ஓவனில் வைத்து சூடாக்கிய பின்பு உண்ண வேண்டும்.இரவு நேரத்தில் அவற்றை உண்பது மிகவும் சுவையாக இருக்கும் என கூறும் கெர், அடுத்த நாட்டிலிருந்து இ-மெயிலில் ஆர்டர் செய்தால் கிடைக்குமாஎன சோதிக்கவே இவ்வாறு செய்ததாக கூறுகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications