இலங்கை: தமிழர்களுக்கு ஆதரவாக அமைச்சர் போராட்டம்
கொழும்பு:
இலங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவில்லையென்றால் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் என்று எஸ்டேட் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மிரட்டல் விடுத்துள்ளார்.
எஸ்டேட் துறை அமைச்சரும், வர்த்த சங்க தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் இதுகுறித்து அளித்த பேட்டி:
இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வாக ரூ 400 அதிகரித்துக் கொடுக்க வேண்டும். முதலில் கடந்த வாரம்சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினோம். அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள், அதைத் தொடர்ந்தால்தேயிலை உற்பத்தித் தொழிலாளர்கள் தங்களது வேலையை இழக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
இதனால் நான் மட்டும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தேயிலை உற்பத்தித் தொழிலாளர்களது சம்பள உயர்வு குறித்துஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு சம்பள உயர்வு குறித்து அரசிடம் வலியுறுத்தா விட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
இலங்கை தேயிலை ஏற்றுமதியில் முன்னணியில் நிற்கிறது. கடந்த வருடம் தேயிலை ஏற்றுமதியில் மட்டும் 687 டாலர்கள் லாபம் கிடைத்துள்ளது.
இருப்பினும், தேயிலை தோட்ட உரிமையாளர்கள், தேயிலை ஏற்றுமதி மிகவும் நஷ்டத்தில் இருப்பதால் தொழிலாளர்களுக்கு, சம்பள உயர்வுவழங்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர் சிலோன் ஊழியர்கள் காங்கிரஸ் தலைவராகவும் இருந்து வருகிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications