ரயில்வே பட்ஜெட் தொழில்துறையை பாதிக்குமா?
சென்னை:
ரயில்வே பட்ஜெட் தொழில் துறையை பாதிக்கும் என பல வர்த்தக சபையினரும் கரு த்துதெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரயில்வே பட்ஜெட்டைசமர்பித்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படுத்தப்படவில்லை. ஆனால் சரக்குக்கட்டணம் 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது, இதை பல வர்த்தக சபையினரும குறைகூறியுள்ளனர்.
சரக்கு கட்டண உயர்வு தொழில்துறையை பாதிக்கும் என அவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
இந்த பட்ஜெட் எந்த விதத்திலும் மக்களுக்கு பயனளிக்கவில்லை. சாலைவழிப்போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு உதவும் விதமாகரயில்வே எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை வர்த்தக சபையின் தலைவர் சபாரத்தனம் கூறுகையில். இந்த ரயில்வேபட்ஜெட்டில் பொருளாதாரத்துக்கும், வர்த்தகத்திற்கும் உதவும் விதமாக எந்த விதமானசெயல் திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்றார்.
ஆந்திரா வர்த்தக சபையின் தலைவர் பாவர்லால் நாகர் கூறுகையில், சரக்கு கட்டணம்உயர்த்தப்பட்டிருப்பது ரயில் போக்குவரத்தை செலவு மிகுந்ததாக்கும். இதுதொழிற்சாலைகளின் உற்பத்தியைப் பாதிக்கும். மேலும் ரயில்வேயின் வருமானத்தையும்பாதிக்கும் என்றார்.
சிந்தி வர்த்தக சபை தலைவர் லால்சந் கே. நிச்சானி கூறுகையில், சரக்கு கட்டணம்உயர்த்தப்பட்டிருப்பது தொழிற்சாலையை பாதிக்கும். இது தொழிற்சாலைகளுக்குஅளிக்கப்பட்டிருக்கும் தண்டனை என வர்ணித்தார்.
அனைத்திந்திய வரி கட்டுவோர் கழகத்தின் தலைவர் அசோக் குமார் கூறுகையில், கண்ணாகமிட்டி பயணிகள் பாதுகாப்புக்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனகூறியிருந்தது. ஆனால் பட்ஜெட்டில் பயணிகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ 300கோடி நிதி குறைவானது என்றார்.
யு.என்.ஐ.