சிதைக்கப்படும் மொட்டுக்கள்
கொழும்பு:
இலங்கையில் தொடர்ந்து வரும் இனக்கலவர பிரச்சனை ஒரு புறம் நீடித்து வரும் நிலையில் அந்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையும்அதிகரித்து வருகிறது.
இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் குற்றங்களில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்தாண்டு 1200வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறும் இலங்கையின் நீதித்துறை, நடைபெறும் சம்பவங்களில் பாதிதான் புகார் செய்யப்படுகின்றன என்கிறது.
இதனிடையே, நீதித்துறை நடவடிக்கைகளால் அலைக்கழிக்கப்படும் குழந்தைகளை காக்க, குழந்தைகள் பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்கதனி நீதிமன்றம் அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளுக்கு உகந்த சூழ்நிலையில் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளை பாழாக்கும் பாதகர்களில் 90 சதவீதம் பேர் இலங்கைவாசிகளே எனக்கூறும் அதிகாரிகள், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும்வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் பிடிபடாமல் நாட்டை விட்டு தப்பி விடுகின்றனர் என்கின்றனர். குழந்தைகளுக்கு கல்வி கற்றுத்தர வேண்டியஆசிரியர் 9வயது பெண் குழந்தையை கர்ப்பமாக்கிய கொடுமையும் நிகழ்ந்துள்ளது.
1998ம் ஆண்டு திருத்தப்பட்ட இலங்கையின் சட்டப்படி இத்தகைய குற்றங்களுக்கான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள புகழ்பெற்ற பள்ளிஒன்றின் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட காரணமாக இருந்த பள்ளியின் இசைப்பயிற்சி ஆசிரியர் ஒருவரும், பள்ளியின் உணவக பணியாளர் ஒருவரும்முதன்முறையாக 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.
இத்தகைய கொடுமைகளை புரியும் கயவர்களுக்கு இத்தண்டணை ஒரு பாடமாக இருக்கும் என இத்தண்டனையை வரவேற்ற மெளரீன சேனேவீரத்னேஎன்பவர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்