நடுங்கின அசாம், பூடான்
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மாநிலங்களிலும், அண்டை நாடான பூட்டானிலும் செவ்வாய்க்கிழமை காலை 4.7 என்றரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், அசாம் மாநிலம் கவுஹாத்தியில் வாழும் மக்களின் மனதில் இன்னும் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பீதிமறையவில்லை. இதனால் நிலநடுக்கம் லேசாக ஏற்பட்டவுடனேயே அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடி விட்டனர்.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றனர்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங் பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை சரியாக 7.16 மணிக்கு நிலநடுக்கம்ஏற்பட்டது. 4.7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றார்.
கவுஹாத்தியைச் சேர்ந்த பெண் எல் ரஹ்மான் கூறுகையில், நான் என் வீட்டு சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென்று எங்கள் வீடுகுலுங்க ஆரம்பித்தது. உடனடியாக நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டோம். குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இன்னும் எங்கள் கண்முன்னேநிற்கிறது என்றார்.
முன்னதாக, குஜராத்தில் குடியரசு தினமான ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் 25, 000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.
பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்த், திரிபுரா ஆகிய மாநிலங்களில்நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
1897 ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 8.7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,600 க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர்.
அசாமில் 1950, ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி 8.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1, 500 பேர் உயிரிழந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.