For Daily Alerts
Just In
ராமதாஸ் புகாரை மறுக்கிறார் தமிழக டிஜிபி
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தவைலவர் டாக்டர் ராமதாஸ் தனக்கு சென்ற மாதம் தான் ஒய் பிரிவு வழங்கப்பட்டுள்ளதுஎன கூறியதை தமிழக டிஜிபி ராஜகோபாலன் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ராமதாசுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு 1998-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வழங்கப்பட்டு வருகிறது.
அவர் மீது 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்ட பின் அவருக்கு 20 ஆயுதம் தாங்கியபோலீசார் காவலும் வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறிய பின்பு 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதிமுதல்தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க்பட்டது என ராமதாஸ் கூறுவது தவறானது என்றார்.
யு.என்.ஐ.
Story first published: Tuesday, February 27, 2001, 5:30 [IST]