திமுக வில் சேரத் துடிக்கும் 3 கட்சிகள்
சென்னை:
புதிய நீதிகட்சி, விடுதலை சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம் ஆகிய மூன்று கட்சிகளும், வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக வுடன் கூட்டணி வைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளன என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரும், தி.மு.க. தேர்தல் குழுத் தலைவருமான ஆற்காடு வீராசாமி புதன்கிழமைதெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி, திமுக வுடன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் ஊழல் வழக்கில் தொடர்புடையமக்கள் தமிழ் தேச கட்சியின் தலைவர் கண்ணப்பனுக்கு (அதிமுக முன்னாள் அமைச்சர்) திமுக வில் இடம் அளிக்க கூடாது என்று ஏற்கனவே முதல்வர்கூறியுள்ளார். அதனால் கண்ணப்பனை தி.மு.க வில் சேர்க்க மாட்டோம்.
சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி மற்றும் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுக வில் இணைவது குறித்துகருணாநிதிதான் முடிவெடுக்க வேண்டும்.
தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் கூட்டணி கட்சிகளுடன் விவாதிக்கப்படும். அதாவது கூட்டணிக் கட்சிகள் தேர்தல் ஆலோசனைக் குழு அமைத்த பின்இதுகுறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.
யு.என்.ஐ.