For Daily Alerts
Just In
தபால் கட்டணம் உயரும்
டெல்லி:
தபால் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன.
பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக ரூ. 1 கோடியில் நல நிதி அமைக்கப்படவுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறுபிரச்சனைகளை நிருபர்கள் சந்தித்தவேண்டியுள்ளதால் இந்த நிதி அறிவிக்கப்படுவதாக யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
மின்சார வினியோகத்தை வர்த்தகமயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கித் துறையை சீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து பி.எஸ்.ஆர்.பிகளும் (வங்கிப் பணியாளர் தேர்வாணையம்)ஒழிக்கப்படவுள்ளன. இதனால் வங்கிகளில் வேலைவாய்ப்பு பெருமளவில் குறையும். வங்கிகளையும், இன்சூரன்ஸ்நிறுவனங்களையும் முழுமையாக கம்ப்யூட்டர்மயமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் 50 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments