For Daily Alerts
Just In
பங்குகள் மூலம் நிதி திரட்ட குஜராத்துக்கு அனுமதி
டெல்லி:
குஜராத் அரசு பூகம்ப நிவாரண நிதிக்காக பங்குப் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்ள அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகளில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படும். ரூ. 5 பில்லியன்இருப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய இயற்கை சீரழிவு அவசர நிதிக்கு மேலும் நிதி ஒதுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கடன்களை வசூலை ஒத்தி வைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.வீடு இழந்தவர்களுக்கு ஹட்கோ மூலம் நிதி உதவி அளிக்கப்படும். ஹட்கோ உதவியுடன் கட்டப்படும் வீடுகளுக்குபயன்படுத்தப்படும் சிமெண்ட் மற்றும் இரும்புக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
நிவாரணப் பணிக்கான எந்தப் பொருளுக்கும் வரி இருக்காது.
Comments
Story first published: Wednesday, February 28, 2001, 5:30 [IST]