கிரிக்கெட்: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
மும்பை:
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தனது சாதனையை தொடர்கிறது ஆஸ்திரேலியா. சொந்த மண்ணில் மட்டுமேஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றி பெறுகிறது என்ற கருத்தையும் அந்த அணி மாற்றியமைத்தது.
2வது நாள் ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸில் 2விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை எடுத்திருந்த இந்தியா இன்றைய 3வது நாள்ஆட்டத்தில் டெண்டுல்கரை இழந்தபின் படு வேகத்தில் சரிவை நோக்கிச் சென்றது.
கேப்டனின் பொறுப்பற்ற ஆட்டம் காரணமாக இந்தியாவின் மிடில் ஆர்டர் சோபிக்க தவறியது. அவர்களை பின்பற்றிய கடைசி பேட்ஸ்மேன்களும் சரியாகஆடவில்லை. ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் தொடர்ந்து ஏழாவது முறையாக டக் அவுட்டானார் அகர்கர்.
5நாள் டெஸ்ட் ஆட்டத்தை 3ம் நாளே முடிக்க முடிவு செய்த இந்திய அணி, இன்னிங்ஸ் தோல்வி வேண்டாமே எனக்கருதி, 47 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற "கடினமான" ஸ்கோரை ஆஸ்திரேலியாவிற்கு அளித்தது.
ஸ்லாடரும், ஹேடனும் இணைந்து ஆஸ்திரேலியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.