For Daily Alerts
Just In
முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்தது
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் பணி முடிவடைந்துள்ளது என சென்சஸ் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் சந்திர மெளலி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக் கையில், முதல் கட்ட சென்சஸ் பணி முடிந்துள்ளது. அடுத்த கட்டப் பணி மார்ச் 1 முதல்(வியாழக்கிழமை) முதல் 5-ம் தேதி வரை நடைபெறும். இரண்டாவது கட்டப் பணியின் போது விடுபட்டவர்கள்மற்றும் புகார்கள் குறித்து கவனிக்கப்படும்.
முதல் கட்டப் பணியில் 1.2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 1.20 கோடி வீடுகள்கணக்கெடுக்கப்பட்டன.
ஏதாவது புகார்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்க சென்சஸ் பிரிவு வசதி செய்துள்ளது. 1600-334525 என்றகட்டணமில்லாத தொ லை பேசி மூலமோ அல்லது ஞீஞிணிணாணதிண்ணடூ.ஞிணிட் என்ற ஈ மெயில் முகவரியிலோதங்களது புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
Story first published: Thursday, March 1, 2001, 5:30 [IST]