பாக். சிறையில் 1,000 இந்தியர்கள்
டெல்லி:
பாகிஸ்தான் சிறையில் 54 இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 1,000 இந்தியர்கள் உள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் அஜித் குமார் பாஞ்சா வியாழக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க மத்திய அரசு முயன்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1000 இந்தியர்களில் 946 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 127 பேர்மீனவர்கள்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை விடுவிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
மேலும் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 116 பாகிஸ்தான் மீனவர்களை சமீபத்தில் விடுவித்தோம். இதனால் பாகிஸ்தான் சிறையில்அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை அவர்கள் விரைவில் விடுவிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.