பூகம்ப சோகம்: ஹோலி கொண்டாட பிரதமர் மறுப்பு
டெல்லி:
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதமாக வசந்த காலத்தின் துவக்கத்தில் கொண்டாடப்படும் வண்ணங்களின்பண்டிகையான ஹோலி பண்டிகையை கொண்டாடப்படுவதில் என பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவல செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இந்த மாதம் 10-ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் ஹோலி பண்டிகையை பிரதமர் வாஜ்பாய் கொண்டாட மாட்டார். குஜராத் பூகம்பத்தில்பாதிக்கப்ட்டவர்களின் சோகத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை காட்டும் விதமாகவும், அவர்களால்மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத ஹோலி பண்டிகையை தானும் கொண்டாடுவதில்லை என முடிவெடுத்துள்ளார் என்றார்.
ஹோலி பண்டிகை நல்லெண்ணத்தையும், மகிழ்சியையும் தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது மக்கள் ஒருவர் மீது ஒரு வண்ணப் பொடிகளை பூசியும், வண்ண நீரை ஊற்றியும் மகிழ்சியாக கொண்டாடுவர்.
ஐ.ஏ.என்.எஸ்.