செய்தித்தாள்களே இல்லாத நாடுகள்
டெல்லி:
பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்நாளில் 29நாடுகளில் செய்தித்தாள்களே இல்லை என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
மேலும் இவற்றில் 5 நாடுகளில் தங்கள் நாடுகளுக்கென சொந்தமான தொலைக்காட்சி சேவையே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
2000 மாவது ஆண்டில் நடந்த விஷயங்கள், கருத்துக் கணிப்புக்கள் குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
1997 ம் ஆண்டு கணக்குப்படி, வளர்ந்த நாடுகளில் இரண்டு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் வளர்ந்து வரும் நாடுகளில் 20 பேருக்கு ஒருவர் என்றவிகிதத்திலும் தொலைபேசி இருந்தது.
வட அமெரிக்காவில் மட்டும் இன்டர்நெட் உபயோகிப்பவர்கள் ஒரு லட்சம் பேர் என்றும், ஐரோப்பாவில் 7000 பேர் என்றும் தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளில் 1,000 வீடுகளில் 50 வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சிகள் உள்ளன. அதே போல் 1,000 வீடுகளில்420 பேர் வீடுகளில் ரேடியோக்கள் உள்ளன. (இவை வளர்ந்த நாடுகளில் உள்ள கணக்குகள்)
இவ்வாறு யுனெஸ்கோ செய்தி வெளியிட்டுள்ளது.
யு.என்.ஐ.