For Daily Alerts
Just In
தேர்தலுக்குத் தயாராகும் எம்.ஜி.ஆர். அதிமுக
சென்னை:
தொகுதிப் பங்கீடு குறித்து திமுக குழுவினரிடம் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். அதிமுக, மூன்று பேர் கொண்டகுழுவை நியமித்துள்ளது.
இதுகுறித்து எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்க்காடுவீராசாமி தலைமையிலான திமுக தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் பேசுவதற்காக எம்.ஜி.ஆர். அதிமுகசார்பில் மூன்று பேர் கொண்ட குழு அ மைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் முனு ஆதி, ஆஸ்டின், ஜே.ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எங்களது கட்சி கோரும்தொகுதிகள் குறித்து இவர்கள், திமுக குழுவினருடன் பேசி முடிவு செய்வர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
Comments
Story first published: Monday, March 5, 2001, 5:30 [IST]