த.மா.கா.வுடனான கூட்டணி முறியவில்லை: ஜெ.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழ் மாநில காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணிக்கு 45 தொகுதிகள் ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
திங்கள்கிழமை அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டது. த.மா.க.ா, காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி எதுவும்கிடையாது என கூறப்பட்டது.
இந் நிலையில் பெரும் திரளாக கூடியிருந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பேசினார். அவர் பேசுகையில், த.மா.கா.,காங்கிரசுடனான அ.தி.மு.க. கூட்டணி முறிந்து விட்டதாக கூறுவது தவறு. நான் கூட்டணி குறித்து தொடர்ந்து மூப்பனாருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன்.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் இணைய காங்கிரஸ் முன்வந்தால் பாண்டிச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சி பங்கீடு கொள்கையின் படி காங்கிசுக்குவாய்ப்பளிக்கப்படும்.
பாண்டிச்சேரியில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்பது காங்கிரசின் விருப்பத்தை பொறுத்தது. காங்கிரஸ் விரும்பினால் பாண்டிச்சேரியில் அ.தி.மு.ககூட்டணியில் இணையாமல் போட்டியிடலாம் என்றார்.
யு.என்.ஐ.