தி.மு.க.வில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம்
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன் தி.மு.க. அணியில் இணைந்தார்.
அ.தி.மு.க. அணியில் இதுவரை திருமாவளவன் இருந்தார். ஆனால் பா.ம.க. தலைவர் ராமதாஸ் அ.தி.மு.க.அணியில் சேர்ந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தார். அணியிலிருந்து விலகுவது என முடிவு செய்தார்.
ஆனால் த.மா.கா. தலைவர் மூப்பனாரின் முடிவுக்காக காத்திருந்தார். மூப்பனார் எந்த முடிவும் எடுக்காமல் காலம்தாழ்த்தியதால் தான் மட்டும் வேறு அணியில் சேர முடிவெடுத்தார்.
திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு ஆதரவாளர்கள் புடைசூழசென்று, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க. அணியில் இணைந்தார்.
பின்னர் கருணாநிதி நிருபர்களிடம் பேசுகையில், திருமாவளவன் எங்களுடன் இணைந்துள்ளார். மூப்பனாரையும்தி.மு.க. அணிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே. கூட்டணிக்கான கதவுஅடைக்கப்பட்டதாக நாங்கள் கூறவில்லை. அவர்கள்தான் கதவை அடைத்து இருப்பதாக கூறினோம்.
புதுவையில் ஆட்சியை பங்கிட அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் உடன்பாடு செய்து உள்ளனர். இது என்ன பட்டி,விக்கிரமாதித்தன் கதையா, நீ 6 மாதம், நான் 6 மாதம் என்று கூற.
ம.தி.மு.க., பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி குறித்து இரண்டொரு நாளில் பேச்சுவார்த்தை துவங்குவோம். எங்கள்அணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது. 3-வது அணி அமைத்தால் கூட நாங்களே வெற்றி பெறுவோம் என்றார்.
திருமாவளவன் கூறுகையில், மரியாதை கொடுக்கும் அணியில் இணைந்துள்ளோம. எங்கள் முக்கிய எதிரியேபா.ம.க.தான். அந்த கட்சியுள்ள அணியை தோற்கடிப்பதே எங்களது லட்சியம்.
மூப்பனாரும் இந்த அணிக்கு வர வேண்டும். அது நடப்பதுதான் ஜனநாயகத்துக்கும் நல்லது. நாங்கள் மூன்றாவதுஅணியில் சேர மாட்டோம். அந்த அணி அமைவதற்கும் வாய்ப்பில்லை என்றார்.