பா.ஜ.க.வில் இணைய வாழப்பாடி திட்டம்
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு, பாரதிய ஜனதாக் கட்சியுடன் சேர வாழப்பாடி ராமமூர்த்தி திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் தனிக்கட்சி நடத்துவதை விட பா.ஜ.க.வில் சேர்ந்தால் வாழப்பாடி ராமமூர்த்திக்கு உயர்ப்பதவி தரப்படும் என்று பா.ஜ.க மூத்த தலைவர்ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.
பா.ஜ.க வில் சேர்ந்தால் திருச்சி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் வாழப்பாடி ராமமூர்த்தியிடம் கூறியதாகத்தெரிகிறது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யானவர் ரங்கராஜன் குமாரமங்கலம். பா.ஜ.கஅமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருந்த அவர் மரணமடைந்து விட்டதால் அந்தத் தொகுதியில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு திருச்சிநாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
பா.ஜ.க. வில் சேர்வது மட்டுமின்றி திருச்சி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைப்பதால் இதை வாழப்பாடி ராமமூர்த்தி ஏற்றுக் கொள்வார்என்று தெரிகிறது.
மேலும் கடந்த சில தினங்களாக வாழப்பாடி ராமமூர்த்தி இதுகுறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் ஆலோசித்து வருவதாகவும், திருச்சி நாடாளுமன்றத்தொகுதியில், ரங்கராஜன் குமாரமங்கலத்தின் செல்வாக்கால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்றும் இவர் நம்புவதாகவும் தெரிகிறது.