புத்தர் சிலையை காக்க இலங்கை தீவிர முயற்சி
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலைகளை காப்பாற்ற பாகிஸ்தான் உதவி கோர இஸ்லாமாபாத் விரைகிறார் இலங்கை பிரதமர்.
இலங்கை பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயகே, சனிக்கிழமையன்று பாகிஸ்தான் சென்று, உள்துறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதர் மற்றும் தலிபன்தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
ஆப்கனில் உள்ள புத்தரின் சிலைகளை தகர்க்கும் தலிபன்களின் முடிவை மாற்றக் கோருவார். பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஸாரப்பையும்விக்ரமநாயகே சந்திக்கிறார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், லட்சுமண் கதிர்காமர், வெள்ளிக்கிழமையன்று பர்வீஸ் முஸாரப்பை சந்தித்துபேசும் போது ஆப்கன நடவடிக்கை பறறிய இலங்கையின் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஆப்கன் சென்றுள்ளார். அங்கு தலிபன்களை சந்தித்து புத்தர் சிலைகளை தகர்க்கும்உத்தரவை மாற்றுவது பற்றி விவாதிக்கிறார்.
லஸ்கர்-இ-தோய்பா, ஜமாத் உலேமா - இ- இஸ்லாம் போன்ற தலிபன்களுக்கு நெருக்கமான முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் மூலம் ஹைதர்பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
சனிக்கிழமையன்று இஸ்லாமாபாத் வரும் ஐ.நா.பொதுச்செயலாளர் கோபி அன்னான், பாகிஸ்தான் ஆட்சியாளருடன் இது குறித்து பேசுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமையன்று ஜப்பானிய குழு ஒன்று காந்தஹாரில், தலிபன்களின் வெளியுறவு அமைச்சர் வாகில் அஹமது முத்தவாகிலை சந்தித்து பேச்சுவார்த்தைநடத்தியது.
நீண்ட நேரம் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையின் விவரம் தெரியவில்லை என பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள சானா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில், பாகிஸ்தான் அமைச்சரின் முயற்சி தோல்வியுற்றதாக கூறியுள்ளது.
புத்தர் சிலைகளை ஆப்கனிலிருந்து வெளியேற்றிக் கொள்வதோடு ஆப்கனுக்கு நிதியுதவியை அதிகரிக்கவும் பாகிஸ்தான் முன்வந்தது.
ஆனால், தலிபன் மதத்தலைவர்கள் இவற்றை மறுத்ததோடு, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான இச்சிலைகளை அழிக்க வேண்டுமே தவிரஇவற்றை நாட்டை விட்டு வெளியேற்ற கூடாது என கூறியுள்ளதாக தலிபன் அமைச்சர் முத்தவாகில் பாகிஸ்தான் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.என்.எஸ்