167 இடங்களில் தி.மு.க. போட்டி
சென்னை:
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளல் தி.மு.க. மொத்தம் 167 இடங்களில் போட்டியிடும் என அக் கட்சியின் தேர்தல்கமிட்டித் தலைவர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
மீதமுள்ள 67 இடங்கள் கூட்டணிக் கடசிகளுக்கு ஒதுக்கப்படும் என்றார்.
திமுக தலைமையகமான அறிவாலயத்தில் அவர் கூறியதாவது:
கடந்த தேர்தலில் மொத்தம் 167 இடங்களில் தி.மு.க. வென்றது. இந்த தொகுதிகள் அனைத்திலும் தி.மு.கவே மீண்டும்போட்டியிடும். மீதமுள்ள தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
எம்.ஜி.ஆர். அதிமுக தலைவர் திருநாவுக்கரசு எங்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் கட்சிக்கு பலம் உள்ளதொகுதிகளை அடையாளம் கண்டு தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசிய பின்னர் தான் அவருக்கு எத்தனைஇடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரியும்.
திருநாவுக்கரசுவின் சார்பில் அவரது கட்சியைச் சேர்ந்த முனு ஆதி, என்.எஸ். ராமச்சந்திரன், ஆஸ்டின் ஆகியோர் எங்கள்கமிட்டியுடன் ஆலோசனை நடத்தினர்.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இன்று பேச்சு நடத்திவிட்டுச் சென்றார்.
13ம் தேதி இறுதி சீட் பகிர்வு அறிவிப்பு:
கூட்டணிக் கடசிகளுடன் வரும் 13ம் தேதி சீட் பகிர்வு குறித்த இறுதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதையடுத்த இரு நாட்களில்ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடம் என்பது அறிவிக்கப்படும் என்றார்.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதீய ஜனதாவுககு 23 இடங்களை கருணாநிதி ஒதுக்கியுள்ளார். எனவே மீதமுள்ள 44இடங்கள் தான் மதிமுக, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், எம்.ஜி.ஆர். அதிமுக, ஆர்.எம். வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம்,வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜிவ் காங்கிரஸ, ராமதாசிடம் இருந்து சண்டைபோட்டு பிரிந்து வந்த தீரனின் தமிழ்பா.ம.கா, குமரி அனந்தனின் தொண்டர் காங்கிரஸ், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் பல சிறு சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும்.
அதிமுக கூட்டணியிலும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், அதிமுகவால் சுமார் 140 இடங்களில் தான் போட்டியிடமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.