அமெரிக்க துணை அமைச்சரானார் இந்தியர்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சுகாதாரத்துறை துணை செயலாளராக (துணை அமைச்சர்) அமெரிக்க வாழ் இந்தியர் பாபி ஜின்டால் நியமிக்கப்பட்டுள்ளார்.
34 வயதாகும் ஜின்டால் தற்போது லூஸியானா பல்கலைக்கழக அமைப்பின் தலைவராக உள்ளார். அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் துணைசெயலாளராக தற்போதைய அதிபர் புஷ்ஷால் நியமிக்கப்பட்டுள்ளார் ஜின்டால். இத்தகைய உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிய- அமெரிக்கர்களில்ஜின்டால் தான் இளையவர்.
லூஸியானாவின் மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறைக்கான செயலாளராக முன்பு பணியாற்றிய அனுபவமுள்ள ஜின்டால் மிக இளைய வயதிலேயேபல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
புஷ்ஷின் நியமனத்தை அமெரிக்க செனட் ஏற்றுக்கொள்வதில் தடை இருக்காது என கருதப்படுகிறது. ஜின்டால் பதவி வகித்த மற்ற அமைப்புகளில்இடம் பெற்றிருந்த உறுப்பினர்கள் பலரும் தற்போதைய செனட்டில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் ஆதரவோடு, லூஸியானா செனட்டர்களின்ஆதரவும் இருப்பதால், ஜின்டாலின் நியமனம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இவருக்கு முன்பு, ரீகன் மற்றும் புஷ் ஆகியோரது நிர்வாகத்தில் ஜாய் செரியன் என்ற இந்தியர், சம வேலைவாய்ப்பு ஆணையகத்தின் ஆணையராக பதவிவகித்திருந்தார்.
2வது முறை கிளின்டன் பதவியேற்ற போது இஸ்லாம் சித்திகி என்ற இந்தியரை விவசாயத்துறைக்கான துணைஅமைசசராக நியமித்திருந்தார். இதுதான் இந்தியர்கள் அமெரிக்காவில் வகித்த மிக உயர்ந்த பதவியாகும்.
ஐ.ஏ.என்.எஸ்