திருப்பூர் நீதிமன்றத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
கோவை;
திருப்பூர் நீதிமன்றத்திற்கு மீண்டும் "மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அல் உம்மா தலைவர் பாட்ஷாவுக்கு பயங்கர ஆயுதங்கள் பதுக்கல் வழக்கு தொடர்பாக நான்கு ஆண்டுகள் கடுங்காவல்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கக் கோரி திருப்பூர் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. மீண்டும்செவ்வாய்க்கிழமையன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில் "திருப்பூர் சார்பு நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒரு மனித வெடிகுண்டு வெடிக்கும். இப்படிக்கு, அல் உம்மா நலம் விரும்பிஎன குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து போலீசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. ஆயுதப்படை போலீசார் உள்பட 200 க்கும் அதிகமான போலீசார் நீதிமன்றவளாகத்தில் குவிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்டது.
ஆனால், வெடிகுண்டோ, மனித வெடிகுண்டோ கண்டு பிடிக்கப்படவில்லை. இத்தகைய சோதனையால் திருப்பூர்நீதிமன்றத்தில் பரபரப்பு காணப்பட்டது.