For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்றைய தினப்பலன்

By Staff
Google Oneindia Tamil News

ஜானகி மந்திரி சபை வந்த போது, அதை காங்கிரஸ் கவிழ்ப்பது, காங்கிரஸுக்குநல்லதல்ல என்று ராஜீவ் காந்தியிடம் பேசி, அந்தப் பேச்சு எடுபடாமல் போனதையும்பார்த்தவன்.

சந்திரசேகர் பிரதமரான போது சில அரசியல் செயல்பாடுகளில் இறங்கியவன்:சந்திரசேகர் - ராஜீவ் மோதல் ஏற்பட்ட போது அதைத் தவிர்க்க முனைந்து தோற்றவன்.

தி.மு.க. அரசு டிஸ்மிஸ் ஆகவேண்டும் என்று பிரதமர் சநதிரசேகரிடம்வாதிட்டவர்களில் ஒருவன்: அன்றைய நிலையில் ஜெயலலிதா அரசியலை விட்டுவிடக் கூடாது என்று வற்புறுத்தியவன்.

ஜெயலலிதா அப்போது காங்கிரஸ் உறவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றுவாதாடியவன்: ராஜீவ் காந்தியிடம் சில கருத்துக்களைக் கூற, அவர் அவற்றைஏற்றதைக் கண்டவன்.

வாஜ்பாய் மந்திரி சபை முதலில் வந்த போது, அதற்கு ஆதரவு தேட முனைந்து தோல்விகண்டவன்: த.மா.கா. உருவாவதற்கும். தி.மு.க. வுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்வதற்கும் உதவி செய்தவர்களில் ஒருவன்.இவற்றில் ரஜினி காந்த் முக்கிய பங்குவகிப்பதற்கு உழைத்தவன்.

பா.ஜ.க. நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வந்த போது, அதற்கு த.மா.கா. அதரவைப்பெற முயற்சித்துத் தோற்றவன்: பா.ஜ.க.வுக்கு அப்போது தி.மு.க.ஆதரவைப் பெறமுயற்சித்து அது நிறைவேறியதைப் பார்த்தவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X