இன்றைய தினப்பலன்
இது ரொம்பவும் தவறான சந்தேகம். அவருடைய வழக்கில், அவருக்கு தண்டனைஅளித்து தீர்ப்பு வந்ததிலிருந்தே, நான் இந்தக் கருத்தைத் தெரிவித்து வருகிறேன்.அதுசட்ட விளக்கமே தவிர, ஜெயலலிதா ஆதரவு அல்ல.
பல சட்ட நிபுணர்கள் அவருக்கு தேர்தலில் போட்டியிடுகிற வாய்ப்பைநீதிமன்றத்தினால் கூட தரமுடியாது என்று பத்திரிக்கைகளில் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இது தவறு என்றும், வழக்கின் தன்மையைப் பொறுத்து, அம்மாதிரி ஒரு வாய்ப்பைஅளிக்க நீதிமன்றத்திற்கு உரிமை உண்டு என்றும் நான் கருத்து கூறி வந்தேன். இது பலமாதங்களாகவே நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஜெயலலிதா சந்திப்பு இதற்குஎப்படி காரணமாக முடியும்?
இது தவிர, பல வாசகர்கள் மனதில் முக்கியமாக எழுந்த கேள்வி - ஜெயலலிதாவைசந்தித்த பிறகு, நீங்கள் தி.மு.க.வை மீண்டும் கடுமையாக எதிர்க்கத்தொடங்கிவிட்டீர்கள்.இது சரியா? - என்பதுதான். இப்படி சில வாசகர்கள் நினைப்பதேஎனக்கு வியப்பாக இருக்கிறது.
தீவிரவாதத்தின்பால் தி.மு.க. ஆட்சியும், முதல்வரும் காட்டும் பரிவு பற்றி நான் சிலவருடங்களாகவே என்னுடைய சந்தேகங்களைத் தெரிவித்து வருகிறேன்:கண்டனங்களை எழுதி வருகிறேன். எச்சரிக்கை செய்து வருகிறேன்.
வீரப்பன் - ராஜ்குமார் விவகாரம் தொடங்கியதிலிருந்து என்னுடைய சந்தேகங்கள்வலுக்க ஆரம்பித்தன. அதனால் என்னுடைய கண்டனங்களில் கடுமை கூடியது. இதற்குஎப்படி ஜெயலலிதா சந்திப்பு காரணமாக முடியும்?
சில வருடங்களாக நான் எழுதி வரும் கருத்துக்களுக்கும், வீரப்பன் விவகாரத்தின்போது - நான் எடுத்த நிலைக்கும்,இப்போது நடந்த சந்திப்பு எப்படி காரணமாகமுடியும்?
(தொடரும்)