For Daily Alerts
Just In
தொண்டமானை கொல்ல புலிகள் சதி: இலங்கை புகார்
கொழும்பு:
இலங்கை அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகம் தொண்டமானை கொல்ல புலிகள் முயற்சிப்பதாக அந் நாட்டு அரசு செய்திவெளியிட்டு உள்ளது.
புலிகள் அமைப்பு அனுப்பியதாக கருதப்படும் ஜோசப் செல்வராஜ் என்பவரை கடந்த செப்டம்பரில் போலீசார் கைது செய்துள்ளனர். அமைச்சரின்நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக புலிகள் இவரை அனுப்பி உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இவர் தந்த தகவல்களை வைத்து திரிகோணமலையில் உள்ள புலிகள் தற்கொலைப்படை அமைச்சரை கொல்ல திட்டமிட்டு இருந்தாக இலங்கை அரசுபத்திரிகையான டெய்லி நியூஸ் இத்தகவல்களை தெரிவித்துள்ளது.
இலங்கை முனனாள் அதிபர் பிரேமதாசா, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் புலிகளின் மனித வெடிகுண்டால்கொல்லப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Monday, March 19, 2001, 5:30 [IST]