9 சீட் வேண்டும்... கருணாநிதியிடம் வாழப்பாடி பிடிவாதம்
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் கேட்ட அளவு தொகுதிகள்தரவில்லையென்றால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி வெள்ளிக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு அளித்தபேட்டி:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில்இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 9 இடங்கள் ஒதுக்குமாறும், பாண்டிச்சேரியில் 3 இடங்கள்ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.
திமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகள் தரவில்லையென்றால் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று தீர்மானித்துள்ளோம்.
இருப்பினும் நான் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு சட்டசபைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
யு.என்.ஐ.