For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் பதவி விலக கோரி தமிழக காங்கிரஸ் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும்என கோரி தமிழக காங்கிரஸ் இந்த மாதம் 31-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரைமாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடும் என தமிழக காங்கிரஸ் தலைவர்இளகோவன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பனும், முன்னாள்தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மூவரும் இளங்கோவனுடன் கூட்டாகபேட்டியளித்தனர்.

அவர்கள் கூறுகையில் தெஹல்கா டாட் காம் நிறுவனம் பா.ஜ.க. தலைவர்களும்அமைச்சர்களும் ஆயுத பேர ஊழலில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் தெஹல்கா டாட்காம் குற்றம் சாட்டியுள்ளது.

இனி மேல் வாஜ்பாய் அரசுக்கு பதவியில் நீடிப்பதற்கு எந்த விதமான உரிமையும்கிடையாது. வாஜ்பாய் அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது நாட்டின் பாதுகாப்புக்குஆபத்தாக அமையும்.

தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளம் கூறியுள்ள ஆயுத பேர ஊழல்குற்றச்சாட்டையும் போபார்ஸ் ஊழலையும் சம்பந்தப்படுத்தக் கூடாது. அது ராஜீவ்காந்தியின் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்ட ஊழல்குற்றச்சாட்டு என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X