தொகுதிப்பங்கீடு: திமுக - எம்ஜிஆர் அதிமுக பேச்சுவார்த்தை
சென்னை:
தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மீண்டும்தொடரும் என எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.தலைவர் திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
சனிக்கிழமையன்று கூடிய அக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்,
தி.மு.க. நமக்கு 2 தொகுதிகள் மட்டும் ஒதுக்கியுள்ளது. இதை ஏற்க முடியாது. சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்துள்ளசில ஜாதிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் நலனையும், மக்களின் நலன் கருதியும் தொகுதி பங்கீடு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் உரிமை கட்சி தலைவர் திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
நிருபர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசு கூறுகையில், தி.மு.க. தலைவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.அவர் எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுப்பார் என நம்புகிறேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
கருணாநிதி விரும்பினால் பா.ஜ.கவிடமிருந்து 2 தொகுதிகள் வாங்கி ம.தி.மு.கவுக்கு கொடுத்தது போன்ற முடிவைஎடுக்கலாம்.
எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. தே.ஜ.கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறது அதில் எந்த விதமான மாற்றமும்கிடையாது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் தி.மு.கவுக்கு அனுப்பப்படும்.கருணாநிதியிடமிருந்து அழைப்பு வந்த பின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என கூறினார்.
யு.என்.ஐ.