For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கூட்டாளி மாறனுக்கு சிறைக் காவல் நீடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்திலில் வீரப்பனுக்கு உடந்தையாக இருந்து கைதானதமிழ் தேசிய விடுதலை படையின் தலைவர் மாறனுக்கு நீதிமன்ற காவல்நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவரை ஏப்ரம் மாதம் 10ம் தேதி வரை காவலில் வைக்க செங்கல்பட்டு மாவட்டநீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் தேசிய விடுதலை படையின் தலைவர் மாறன் மீது , 1996ம் ஆண்டு, ஏப்ரல் 22ம்தேதி, திண்டிவனத்திற்கு அருகே இருக்கும் பேரணி ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைத்தது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

மாறனும், அவரது இயக்க தோழர்களும் பேரணி ரயில்வே ஊழியர்களை அடித்துவிரட்டி விட்டு ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வைத்து விட்டு அவை வெடிக்கும்முன் அந்த இடத்திலிருந்து தப்பி விட்டனர் என அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸ், இந்த வழக்கை விழுப்புரம்காவல்நிலைத்திற்கு மாற்றியது.

இந்த குண்டு வெடிப்பு வழக்கில் மாறன் தேடப்பட்டு வந்தார். ஆனால், தலைமறைவாகஇருந்த அவர் ராஜ்குமார் விவகாரத்தில் பிரபலமானார். கடந்த மாதம் கோவையில்திடீரென கைது செய்யப்பட்டார்.

அன்றுமுதல் பூந்தமல்லி சிறப்பு ஜெயில் அடைக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையவெடிகுண்டு வழக்கு விசாரணை தொடர்பாக மாறன், கடும் பாதுகாப்புடன், வேன்மூலம் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாறனின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 10-ம் தேதிவரை நீடித்து தீர்ப்பளித்தார்.

மாறன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டதையொட்டி நீதிமன்றத்திலும் காவல்பலப்படுத்தப்பட்டிருந்தது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X