For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸி.

By Staff
Google Oneindia Tamil News

புனே(மகராஷ்ட்ரா):

மார்க் வாஹ் மற்றும் மாத்யூ ஹேடனின் ஆட்டத்தால் புனே நகரில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸி. அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டி தொடரின் 2வது ஆட்டம் புனே நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில்புதன்கிழமை நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணியில் ஹேமங்க் பதானி சதம் அடித்தார்(100 ரன்கள்). வி.வி.எஸ் லஷ்மண் (51 ரன்கள்), டெண்டுல்கர் (32 ரன்கள்) தவிரமற்றவர்கள் சிறப்பாக ஆடாததால் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய வீரர் பதானியின் தவறால் லஷ்மணும், தினேஷ் மோங்கியாவும் ரன் அவுட்டாகினர். இந்திய அணியினர் செய்யத் தவறியதை செய்து காட்டினர் ஆஸி.அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மாத்யூ ஹேடனும்(57 ரன்கள்), மார்க் வாஹும்(133 ரன்கள்).

இந்த துவக்க ஜோடி 143 ரன்களை குவித்தது. பின்னர் வந்த லேமன் 1 ரன்னில் ரன் அவுட் ஆகிவிட்டார்.

3வது விக்கெட்டிற்கான மார்க் வாஹ்-மைக்கேல் பெவன் ஜோடியின் நிதானமாக ஆட்டத்தால் 46வது ஓவரில் 249 ரன்களை எடுத்து 8விக்கெட்வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி பெற்றது.

இதனால், 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.

இந்த போட்டியில் வென்றதன் மூலம், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆஸி. அணிக்கு சற்று மன நிம்மதி கிடைத்து இருக்கும். இதனால்இந்தூரில் மார்ச் 31ம் தேதி நடைபெற உள்ள 3வது ஒரு நாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X