For Quick Alerts
For Daily Alerts
Just In
பல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம்
கோவை:
கோவையில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை சிவானந்த காலனியில் ஒரு கம்ப்யூட்டர் மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த மையத்தைச் சேர்ந்தமாணவர்களின் மதிய உணவிற்காக தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது.
அதனை அறியாமல் சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். பிரபு, ரவி, கண்ணன், முருகேஷ், சுசி, நாகராஜ்ஆகியோர் உள்பட 7 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, April 1, 2001, 5:30 [IST]