For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூப்பனாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார் அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியின் உதவியால் நடமாடும்மூப்பனாரை திங்கள்கிழமை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார். அதன் பின்நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா,

இது ஒரு மரியாதைக்குரிய சந்திப்பு. உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள மூப்பனாரை சந்தித்து உடல் நலம் விசாரித்ததோடு அவரது பேரனையும் பார்த்துவந்தேன்.

வரும் தேர்தலில், கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இறுதி செய்யப்பட்டு விட்டது. அவை விரைவில் அறிவிக்கப்படும்.

பாண்டிச்சேரியில் அதிமுக அணியில் த.மா.கா. சேர்வது குறித்து மூப்பனாருடன் விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

பின்னர் பத்திரிகைகளுக்கு வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில், பாண்டிச்சேரியில் பெரும்பான்மை இடங்களில் அதிமுக போட்டியிடும்.

பத்திரிகைகள் தெரிவித்துள்ளது போல் கூட்டணி கட்சிகளை விட குறைவான தொகுதிகளில் போட்டியிடாது என தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

பாண்டிச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை ஏற்கனவே பா.ம.க.விற்கு ஒதுக்கிவிட்டார் ஜெயலலிதா.

அவருடைய அறிக்கைப்படி பார்த்தால், மீதி உள்ள தொகுதிகளில் குறைந்தது 11 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும். மிச்சம் இருக்கக்கூடியது 9தொகுதிகள் மட்டுமே.

பாண்டிச்சேரியில் நாங்கள் தான் நம்பர் 1 எனக் கூறும் காங்கிரசும், த.மா.கா.வும் இந்த 9 தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.

எனவே, பாண்டிச்சேரியை பொறுத்தவரை அதிமுக அணியில் காங்கிரஸ் கட்சி இல்லை என்பது உறுதியாகிவிட்டது. பாண்டிச்சேரி அதிமுக கூட்டணியில் த.மா.காஇருக்குமா, இருக்காதா என்பதை மூப்பனார் தான் அறிவிக்க வேண்டும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X