For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21 இந்திய மீனவர்கள் கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

ராஜ்காட்:

இந்தியாவைச் சேர்ந்த 21 மீனவர்கள் பாகிஸ்தானின் கடலோர காவல் படையினரால் கடத்திச் செல்லப்பட்டனர் எனபோர்பந்தர் மீனவர் கழக தலைவர் வேலுபாய் மோதிவராஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், நான்கு விசைப்படகுகளில் சென்ற இந்தியமீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் இந்திய கடற்பகுதியிலிருந்து கடத்திச் சென்றனர்.

இவர்களில் இரண்டு படகுகள் ஜூனாகாத் மாவட்டத்தில் இருக்கும் மங்க்ரோல் மீனவர் துறைமுகத்தைச்சேர்ந்ததாகும். மற்ற இரண்டும் போர்பந்தர் மீனவர் துறைமுகத்தைச் சேர்ந்ததாகும்.

பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்ட மீனவர்களிடமிருந்து படகுகளையும் இழுத்துச்சென்று விட்டனர் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X