ஏப்.18 ல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி?
சென்னை:
ஏப்ரல் 3வது வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மீண்டும் ஏவப்பட இருக்கிறது.
கடந்த மார்ச் 28ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டது.இதனால், கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவும் முயற்சி கைவிடப்பட்டது.
ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உந்து விசை (திரஸ்ட்) அளிக்க 4 மோட்டார்கள் அதனுடன்இணைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு மோட்டாரின் கேஸ் இன்ஜக்டர் வேலை செய்யாததால் அந்தமோட்டார் எரிந்து போனது.
இதனால், ராக்கெட் ஏவ தேவையான திரஸ்ட் கிடைக்காமல் கம்ப்யூட்டர் தானாகவே ராக்கெட் ஏவப்படுவதைநிறுத்தி விட்டது. உடனடியாக இது பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் சம்பந்தப்பட்ட மோட்டாரை மாற்றி விட்டனர்.
தற்போது இந்த ராக்கெட்டை ஏப்ரல் மாதம் 18 அல்லது 19ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
தற்போது சோதனை முறையில் ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட், ஜி-சாட் என்ற தகவல் தொடர்பிற்கானசெயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது.
மீண்டும் ஒரு முறை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் சோதனை முறையில் ஏவப்பட்ட பிறகே வர்த்தக ரீதியில் 2000 கிலோவரை எடை கொண்ட தகவல் தொடர்பிற்கான செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் செலுத்தும் என இஸ்ரோவட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.