இன்னொரு ஜாதிக்கட்சி
மதுரை:
தமிழகத்தில் உள்ள யாதவ சமுதாயத்தினரால் அழகுமுத்துக்கோன் மக்கள் தேசம் என்ற புதிய கட்சிதொடங்கப்பட்டுள்ளது.
இந்த கட்சி தமிழக முன்னாள் அமைச்சர் கண்ணப்பனால் தொடங்கப்பட்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியை எதிர்த்துதொடங்கப்பட்டுள்ளது
இதுகுறித்து இந்த கட்சியின் தலைவர் ஏ.எம். ராஜ்மோகன் யாதவும், பொதுச் செயலாளர் ஏ.ஆர். ராகவன் யாதவும்செய்தியாளர்களிடம் கூறுகையில், மொத்த யாதவ சமூகத்தினரும் கண்ணப்பனால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக தி.மு.க. கூட்டணியில் இணைந்து யாதவ சமுதாயத்தினரை ஏமாற்றி விட்டார்.
தி.மு.க. தலைமையிலான அணியில் இணைந்து போட்டியிடுவது பற்றி இவர் யாதவ சமூகத்தில் இருக்கும் முக்கியத்தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.
எங்கள் கட்சி வரவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஏதாவது கூட்டணியில் இணைந்துபோட்டியிடுவதா என்பது குறித்து சென்னையில் இந்த மாதம் 10-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முடிவுசெய்யப்படும். ஆனால் எக்காரணம் கொண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைய மாட்டோம்.
கட்சியின் கொடியில் அழகுமுத்துக்கோனின் படம் கறுப்பு நிறத்தில் மேலே இடம் பெற்றிருக்கும். மத்தியில் பச்சைநிறமும், கீழ் புறத்தில் சிகப்பு நிறமும் இருக்கும் என்றனர்.
யு.என்.ஐ.