தேர்தல் பிரசாரம் செய்ய தமிழகம் வருகிறார் வாஜ்பாய்
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்வதற்காகபிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடுஉள்ளிட்ட பல தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள் என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மூன்று தலைவர்களும் இந்த மாதம் 23ம் தேதி முதல் தங்கள்பிரசாரத்தை துவக்குவார்கள். வெங்கையா நாயுடு தமிழகத்தில் 9 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுவார்.
தி.மு.க.தலைமையிலான தே.ஜ.கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கும் ம.தி.மு.க. மீண்டும் கூட்டணியில்இணைந்து தே.ஜ.கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஆனாலும் பா.ஜ.க. எந்த விதமானசமரச முயற்சியிலும் ஈடுபடாது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் சமரச முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. ஆனால் அவர் முயற்சியின் முடிவுஎன்ன என்பது தெரியவில்லை.
பா.ஜ.கவின் நாடாளுமன்ற குழு 21 சட்டசபை தொகுதிகளிலும், திருச்சி நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடும்வேட்பாளர் பட்டியலை இந்த மாதம் 9ம் தேதி டெல்லியில் வெளியிடும்.
இந்த பட்டியலில் சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில்போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிட்டது.
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ராமதாஸ் கெடு விதித்திருப்பது வேதனை அளிக்கிறது. இரண்டுநாட்களுக்குள் காங்கிரஸ் முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் காங்கிரசுக்கு கெடு விதித்துள்ளார்.
இது போல் அவர் கெடு விதித்திருப்பது அவர் சார்ந்துள்ள கூட்டணி தலைவர் ஜெயலலிதாவை விட அவருக்குஅந்த கூட்டணியில் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை காட்டுகிறது.
தெஹல்கா டாட் காம் கூறியுள்ள குற்றச்சாட்டு தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி கட்சிகளின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது. கருத்துக் கணிப்புகள் அ.தி.மு.க. தான் தேர்தலில் வெற்றி பெறும் என்பதற்கும் நான் எந்தமுக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை என்றார்.
யு.என்.ஐ.