For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் முழுவதும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

முப்பது அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட பஞ்சாலைத் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.

கோவையில் தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் நஞ்சப்பன் கூறியதாவது:

பஞ்சாலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் வரும் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.

இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு பிறகும் பலன் கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் குறித்து அனைத்து மில்களுக்கும் நோட்டீஸ்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தென்னிந்திய பஞ்சாலைகளின் சங்கம் (சைமா) மற்றும் தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) ஆகியவற்றுடன் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த போராட்டத்தில்ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X