அமெரிக்கா திரும்பினார் கிளின்டன்
டெல்லி:
இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் செவ்வாய்க்கிழமை அமெரிக்கா திரும்பினார்.
செவ்வாய்க்கிழமை காலை 0330 மணிக்கு நியுஜெர்சி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமெரிக்க இந்தியபிரதிநிதிகள் சிலரும் சென்றனர். இவர்கள்தான் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிளின்டன்நேரில் சென்று பார்வையிட ஏற்பாடு செய்திருந்தனர். மூத்த அரசு அதிகாரிகளும் கிளின்டனை விமானநிலையத்தில்வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு டெல்லி மவுரியா ஷெராட்டன் ஹோட்டலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியும், கிளின்டனும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது முன்னாள் மத்தியவெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வார் சிங்கும் உடன் இருந்தார்.
திங்கள்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து டெல்லி திரும்பிய கிளின்டனுக்கு, ஹோட்டல் தாஜ் பேலஸில் அமெரிக்காவில்வாழும் இந்தியர்கள் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக கிளின்டன் மும்பை, கொல்கத்தா,ஜெய்ப்பூர் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்றார்.
யு.என்.ஐ.