தென் ஆப்பிரிக்காவில் கிருஷ்ணர் திருவிழா
டர்பன்:
இஸ்கான் அமைப்பின் (ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பு) நடத்தும் நான்குநாள் திருவிழா தென்ஆப்பிரிகாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த திருவிழாவின் போது தேர் திருவிழாவும் நடைபெறும். 15 மீட்டர் உயரமுள்ளதங்கதேரை நூற்றுக்கணக்கான தென் ஆப்பிரிக்க பக்தர்களுடன் இந்தியா, நியுசிலாந்து,பிரிட்டன். அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வரும் இஸ்கான் உறுப்பினர்களும்இணைந்து இழுப்பார்கள்.
தேரில் பலூன்கள், மலர்மாலைகள், கொடிகள் போன்றவை கட்டிஅலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த தேரை தொடர்ந்து சிறுவர்கள் இழுத்து வரும் சிறுதேர்களும் வரும்.
இங்கு இந்த தேர்த் திருவிழா 13வது வருடமாக இஸ்கான் இயக்கத்தினரால்நடத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை நடந்த திருவிழாவின் முதல் நாள் பூஜையில் தென்ஆப்பிக்காவில் உள்ள இந்திய தூதர் கவுன்சல் ஜெனரல் அஜீத் சிங் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியையொட்டி தென் ஆப்பிரிக்காவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்தகலைஞர்களும் தொடர்ந்து பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
இந்தி, தமிழ். தெலுங்கு,மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நாட்டியம்,இசை நிகழ்ச்சி மற்றும் நாடகங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
அயல்நாடுகளிலிருந்து வரும் இஸ்கான் தலைவர்கள் சிறப்புரைகள் நிகழ்த்துவார்கள்.சனிக்கிழமை மாலை நடைபெறும் வானவேடிக்கைள் பலரின் கவனத்தையும் கவரும்விதத்தில் அமையும்.
இந்த திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மொத்தம்2,00,000 பேர் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்