For Daily Alerts
Just In
தமிழ் தீவிரவாதி சத்யமூர்த்திக்கு காவல்நீட்டிப்பு
ஈரோடு:
தமிழ்த்தீவிரவாதி சத்யமூர்த்திக்குக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையம் கடந்த 1998 ம் ஆண்டு வீரப்பன் கும்பலால்தாக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக தமிழ்த்தீவிரவாதி சத்தியமூர்த்தி உள்பட சிலரைப் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சத்தியமூர்த்தியின் காவல் முடிவடைந்து விட்டதால் அவரை ஈரோடு செசன்ஸ்கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவருக்கு வருகிற 2 ந் தேதி வரை காவலை நீடித்து முதன்மை செசன்ஸ் நீதிபதி ஜே.ஏ.கே.சம்பத்குமார்உத்தரவிட்டார்.
Comments
Story first published: Thursday, April 19, 2001, 5:30 [IST]