For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனா: சுரங்கத்தில் சிலிண்டர் வெடித்து 47 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பீஜிங்:

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் சிலிண்டர் வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணம் சான்ஸங் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்சனிக்கிழமை இரவு எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

அப்போது சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 47 பேர் உடல் சிதறி இறந்தனர்.

சுரங்கம் முழுவதும் அவர்களது சதைத்துண்டுகளும், சிதைந்த உடல்களுமாக மிகவும் கோரமாகக் காட்சியளித்தது.

நிலக்கரிச் சுரங்கத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இருப்பினும், வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நிலக்கரிச் சுரங்கத்தில் ஏராளமானோர் வேலை செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X